மாமல்லபுரம் பிப்16,
அரசுப் பள்ளிகளில், பொதுத்தேர்வு பயத்தை போக்க, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.கல்பாக்கம் அடுத்த, புதுப்பட்டினம், வாயலுார், சதுரங்கப்பட்டினம் பகுதிகளின், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 'ஹேண்ட் இன் ஹேண்ட்' நிறுவன, குழந்தை தொழிலாளர் அகற்றும் திட்டத்தின் கீழ், புதிய எதிர்காலம் படைப்போம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், செல்வராஜ், செல்வி பங்கேற்று, பொதுத்தேர்வு எழுத உள்ள, 10ம் வகுப்பு மாணவ - மாணவியருக்கு, தேர்வை அணுகுவது, கேள்வியை புரிந்து கொள்வது, பதற்றமின்றி விடையளிப்பது, நேர மேலாண்மை குறித்து விளக்கினர்.
பொதுத்தேர்வு மாணவர்களுக்கு விழிப்புணர்வு